Saturday, September 27, 2008

ஒரு மாற்றத்திற்காக...

கவிதைகளால் பிழிந்து எடுக்கப்பட்ட
பிஞ்சு இதயங்களுக்கு ஒரு மாறுபட்ட
நகைச்சுவை..
***************************************

விஜயகாந்த் எந்த தொகுதியில் நின்றாலும்
அவரை எதிர்த்து போட்டியிடுவேன் - நகைச்சுவை புயல் திரு.வடிவேலு

(இவர் ஒரு தலை சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதற்கு இதைவிட
சிறந்த உதாரணம் இருப்பதாக தெரியவில்லை.)

விஜயகாந்த் அவரது தகுதிக்கு வடிவேலு வுடன் எல்லாம் போட்டி
போடக்கூடாது, என்னை போன்ற பெரிய அரசியல்வாதியுடன் தான்
மோத வேண்டும். - பிரபல அரசில்வாதி(?) T.ராஜேந்தர் அவர்கள்.

நம்ம தலையெழுத்து....இதையெல்லாம் கேக்கணும்ணு...!!!

இவங்க உண்மையிலேயே நடிகர்கள் தான் நான் ஒத்துக்கிறேன்...

அப்போ நீங்க??

நன்றி :
திரு.வடிவேலு, திரு. T.ராஜேந்தர், தேவா அண்ணா , திலக் அண்ணா, ரெங்கராஜ் அண்ணா..

அன்புடன்,
மாரிமுத்து..

Friday, September 26, 2008

உன்னிலும் என்னிலும் !
















உலகம்

உயிர்கள் தோன்றிய விதம் பற்றி
ஆய்வு நடத்தி கொண்டிருக்கையில்
என் பார்வையில் உலகம்...
கருவறை மாறியதால் மாறியது பல...
உன்னிலும் என்னிலும்..!

கைப்பிடித்து நீ நடை பழகையில்
நானும் நடை பழகினேன் !
கையேந்தி,
கடைத்தெருவில் !

நீ புசித்து போட்ட எச்சைக்கும்
கூட எனக்கு போட்டியாளன்
என் வயது நண்பன்-
தெரு நாய்!

நீ தாய்ப்பால் பருகையில்,
தண்ணீருக்கே வழியில்லாத
அவளிடம்,
எஞ்சிய
இரத்தமும் எனக்காய்
தாய்ப்பாலானது!

பிரவசத்தில் மட்டும்
நான் உன்னை விஞ்சினேன் !
ஆம்!
நான் சுகப்(?)பிரவசமாம் !
நீ சிசெரியனாம்!

***நாய் பூனைக்குப் பாலூட்டியதாம் !
***ஐந்து ரூபாய் தகராறில் அண்ணன்
அடித்துக் கொலை - செய்திகள் .
இதில் யாருக்கு ஐந்தறிவு ?
யாருக்கு ஆறறிவு ?
புரியவில்லை எனக்கு!

நாளைக்கு மூணுவேளை சாப்பிடணும்,
வரைமுறை உனக்கு !
நாளைக்காவது சாப்பிடவேண்டும்
என்று நான்!

எனக்கொன்றும் நான்
நீயாக வேண்டும்
என்றில்லை !
குறைந்தபட்சம் இத்தகைய
செய்திகளை கேள்விப்படாமல்
இருந்தாலே போதும்!

உலகப் பணக்காரனுக்கே
நாளைய நிலை எண்ணி
தினம் தினம் கலக்கம்!
உள்ளத்தால் பணக்காரனாய்
உணர்கிறேன் நான்!

கந்தையானாலும்
கசக்கிக்கட்டு !
கந்தையே இல்லையெனில் ?

கால் வயிற்று கஞ்சிக்கு
கால் தொட்டு தொழுகிறேன் !
கண நேரத்தில் உடல் முழுதும்
சேற்றை இறைத்தாய் உன் காரில்!

`அனைவருக்கும் கட்டாய கல்வி '
என்பதெல்லாம் அரசியல்
எந்த பள்ளியில் அனுமதிக்கிறார்கள்
என் போன்றவனை?

அத்தனையும் அதிகமாய்
கிடைக்கபெற்ற உங்களுக்குள்ளே இவ்வளவு
போட்டியும் பொறாமையும் !
எதுவுமே இல்லாமல் படைக்கப்பட்ட
என்னையும் உன்னுடன் கலந்தது
எந்த விதத்தில் நியாயம் ?

விடை தெரியாத வினாக்களாகவே
அமைந்தன அத்தனையும்!

நீ
கேட்பது சரிதான்!
சமுதாயத்தில்
காலங்காலமாய் புறக்கணிக்கப்பட்ட
எனக்கு இத்தனை கேள்விகள்
எழக்கூடாது !
எத்தனை என் போன்றவனை
பரிவு காட்டியது இந்த சமுதாயம் ?
என் மனம் நீ அறிந்து கொள்ள ....

எதுவாயினும்
பிறப்பிடம் தவிர்த்து
பிறப்பால் நானும் உன்னில் ஒருவன் தானே ?

அன்புடன்....
மாரிமுத்து.
9790123346

நன்றி!!!