அதிகாலைப் பொழுது முதல்
அந்திசாயும் மாலை வரை
ஒவ்வொரு நொடியும்
உன்னடி பிடித்திடுவாள்!
உதறியபடி நீ
ஊதாரியாய் திரிந்திடுவாய்..
தன்வயிறு
காயினும்,
உன்வயிறு
நிறைத்திடுவாள்!
குற்றவாளி நீ
எனினும்,
உன் முகம்
காட்ட மாட்டாள்!
தலைவலி
கொடுப்பினும்,
இலையிட்டு
உணவளிப்பாள்!
கொலைப்பழி
விழினும்,
வழிசென்று
அழைத்திடுவாள்!
நீ குருதி காண்கிறாய்
ஒரு கொலையில்!
அவள்
உனக்குப் போய்
குருதியையே
உணவாக்கியவள்!
ஆம்!
தாய்மையில்
வேற்றுமையில்லை,
வேற்றுமை......
உன்னிலும் என்னிலும் தான்!!
Sunday, October 5, 2008
Saturday, October 4, 2008
Subscribe to:
Posts (Atom)