Sunday, October 5, 2008

ஊதாரியின் தாய்!

அதிகாலைப் பொழுது முதல்
அந்திசாயும் மாலை வரை
ஒவ்வொரு நொடியும்
உன்னடி பிடித்திடுவாள்!
உதறியபடி நீ
ஊதாரியாய் திரிந்திடுவாய்..

தன்வயிறு
காயினும்,
உன்வயிறு
நிறைத்திடுவாள்!

குற்றவாளி நீ
எனினும்,
உன் முகம்
காட்ட மாட்டாள்!

தலைவலி
கொடுப்பினும்,
இலையிட்டு
உணவளிப்பாள்!

கொலைப்பழி
விழினும்,
வழிசென்று
அழைத்திடுவாள்!

நீ குருதி காண்கிறாய்
ஒரு கொலையில்!
அவள்
உனக்குப் போய்
குருதியையே
உணவாக்கியவள்!

ஆம்!
தாய்மையில்
வேற்றுமையில்லை,
வேற்றுமை......
உன்னிலும் என்னிலும் தான்!!

Saturday, October 4, 2008

சிவப்பு விளக்குப் பகுதி!


அபலைப்

பெண்களின்
அரண்மனை!
விடலைப்
பையன்களின்
விபத்துப் பகுதி!

மழை!



வானம்
பொய்த்து விட்ட
கவலையில்
உழவன் வயலில்!
பெய்தது
மழையாய்
வியர்வைத் துளிகள்...